Sunday, September 9, 2018

Towards Political Redemption


Towards Political Redemption
       The root cause of all the ills of the nation today is the non accountability of the ruling class. Frontline politics is abounding with shamelessly corrupt, criminal, dynastic, communal/ caste based, greedy individuals and leaders, subverting the very idea of democratic and welfare governance. Political power is wielded by a few thugs and extortionists. People are forced to elect only among the contesting, mostly dishonest, self centered, self aggrandizers, while the money bags, business tycoons and their henchmen go about nominating their yes men, stooges and ‘zee boom baas’ to every legislative and administrative position and continue looting all public resources, accumulating them as their personal wealth and investment for future political harvest.    
       Nominated by political party leaders – who themselves are not democratically elected – based only on the capacity to help furthering their own agenda, these candidates do not represent the interests of the people, but only those of the party leaders and the money bags behind them.
       The situation calls for an emergency surgery. Applying some balm here and spraying some pain killer there, will not do. The body polity in a nation is akin to the blood in a human body. It has got rotten. Complete transfusion of blood alone can save the person – nation – now.
       Invariably in discussions on the subject, activists start advocating electoral/ judicial/ police reforms, lok pal/ lok ayuktha regime, right to recall, referendum etc. Scores of recommendations on these are taking a never ending nap in the cupboards of the Government. How can we expect the representatives of political leaders to implement reforms which are designed to work against their own interests? Until and unless we have people’s representatives in governing bodies, no significant reform is possible. In fact with true representatives of the people filling governing bodies, many proposals for reforms may even become redundant.
      Well meaning activists and groups have been trying to nominate honest candidates. But the people look the other way. They tried joining hands and nominating common candidates. Still people did not take cognizance. The activists groups and small but honest parties have little clout with the people. The candidates are not selected by any significant number of electorates. Even the small groups deciding on the candidates’ names, belong to different constituencies. The voters are not prepared to own these candidates. Thus the very idea of our getting honest candidates elected remains stillborn. Instead of telling people to vote for our candidates, if alone we ask them to select their own candidates, we can ensure their owning of the candidates and hence their victory.    
       To ensure that the elected representatives represent us – the people – and not the party bosses and business tycoons, the people have to come together to select among them themselves, honest, non greedy persons, nominate and elect them for all the governing bodies. This will result in a representative yet participatory democracy. This will elevate democracy to the next level and radically change the way we are governed. Right to recall and referendum will become a part of such a process, with power literally flowing in to the hands of the people.   
       This process of ‘empowering the people’ can be facilitated by forming ‘street committees’ and elect representatives to the next level, say colony committees and in turn area, ward, assembly constituency, parliament constituency committees and select people’s candidates to the various governing bodies by up and down consultation. It should be ensured that the candidates selected thus, do not belong to any entrenched political party, are not corrupt, have an inclination to work for the social welfare and are not drunkards. Caste, community, race or wealth, should not come in to consideration. People in every nook and cranny have to be sensitized of the need for this method of ‘search, select, nominate and elect’ to appoint their own representatives as against those imposed by the political parties and money bags. 
       There are many individuals and groups working to change the ground conditions on some problem or other. If the above change to usher in basic, direct, participative democracy – actually a going back to the original idea of democracy – is achieved, solutions to every other problem will fall in place automatically. The people’s committees will be there to guide and check the rulers as a watch dog forever.
       To carry this message far and wide, it is absolutely essential that the various actors in the social sector – individual social activists/ groups, NGOs – come together and hold hands. As the groups are apprehensive and reluctant to come under a single banner, it is sufficient to hold hands to take on the mighty polity to start with. Mergers will take place in due course and ultimately all groups will merge in to one entity called the ‘people’s committee’ and that will rule the roost. 
      With my limited experience in trying to take this message to the people, I can say with certainty that they are willing to grab the idea with both hands. Well, there are hurdles. People ask ‘after taking money, how can we say no to them’. We have to educate them that ‘taking money for vote is not just illegal, it is a SIN. If you receive money, due to need or fear of party henchmen, then there is absolutely nothing wrong in denying them the vote. In fact you should not vote for such candidates even if you like them otherwise’. Further they confront us saying ‘they take promise on our children’s head – how can we go against our promise’. Well the answer is, ‘What you think at heart is the real promise and not what your lips say. Say in your mind ‘I will definitely not vote for you, as you are cheating’ and then say aloud that you will vote only for him. You have to stick to the promise you took at heart and not what your lips said. If you still fear going back, avoid voting altogether or cast a NOTA rather than voting for the culprits’. If the politicos come to know of this campaign, they will realize that it is the end of the road for them.
       Gandhiji realized that the British were very powerful and it is not possible to defeat them, in their own territory, with their kind of weapons. Hence he devised the unassailable ‘Satyagraha’. Today’s politicos too are very powerful indeed. We cannot confront them in their territory and slay them, wielding bows and arrows, while they wield guns and missiles. We need a different weapon altogether like ‘Satyagraha’. The weapon is ‘search, select, nominate, elect’ mode of ‘empowerment’.
       Acting as facilitators for the people to select their own candidate will be the real role of small parties and sociopolitical activists groups, as after all we have not come in, to play politics our selves, but only to reform, revitalize, reinvent and redeem politics.
       Political awareness among the people has been growing. People’s wrath on liquor shops, nuclear plants etc., effort to clean up water bodies themselves, rescue and rehabilitation efforts during floods and storm, in Tamil Nadu as also elsewhere, point to the fact that they have lost faith on these self centered, greedy politicians. This has resulted in the formation of hundreds of new political outfits and many individuals also will enter the fray when elections confront them. But the support base for such candidates – of activists or new political outfits – in any constituency is not going to be significant to help them win. The competition and internal feuds will scatter the votes further and the position of the Goliaths of political parties will remain unassailable as always. If we ask the people ‘to vote for me’ or ‘vote for our candidate’ thus try to thrust the choice of a small group on the people, they are not going to respond favorably. They will continue with the dictum ‘known devil is better than un known angel’. We should sensitize the people and make them select among themselves a suitable candidate of their own, to truly represent them. There should be only one such candidate per constituency. Such candidates can floor any ‘Goliath’. The social activists and small timers in politics can play a major role in this – that of facilitators. Anyway, properly guided, people will only select some socially active persons. If we are the ones, let us accept it as the call of duty. Otherwise too, let us get on with our selfless work as ever! This will be the winning formula.
        Lot of effort has gone in, to promote this idea among the people, with the impending elections to local bodies in TN in focus to start with, hoping to cover the whole country for the assembly and lok sabha elections in due course. Seeds have been sown in many areas in Chennai, its surroundings and faraway as well and the activists are working enthusiastically and tirelessly. The message needs only to be spread to the nooks and crannies of the country. But synergy is needed to deliver death knell to the wayward polity.
        This is not a utopian dream anymore. In Gadchiroli district of Maharashtra adjoining Chattisgarh, activists have ensured electing people’s own candidates for local bodies already. If it is possible in a naxal affected area, why not elsewhere? It has happened in many other pockets of the country as well. We have to only make it a rule and not let it remain an exception.
        Let us wrest our rights from the wayward polity.
By K. Raja Rajan
[A technologist by qualification, farmer by option and Gandhian by conviction]
Gandhian Initiative for Social Transformation,
Cell: 94441 60839,        E mail: letsbelldcat@gmail.com,
Blog: prithvi-mithra.blogspot.in,         Face book: Raja Rajan. K

தீய அரசியலிலிருந்து, தூய அரசியலுக்கு


தீய அரசியலிலிருந்து, தூய அரசியலுக்கு
   இன்று நாம் அனுபவித்துவரும் எல்லா துன்பங்களுக்கும், துயரங்களுக்கும் முக்கிய காரணம் அரசியலில் நேர்மையின்மை. முன்னணி அரசியல் குற்ற உணர்வின்றி, ஊழல்வாதிகள், குற்றவாளிகள், ஜாதி மத வாதிகள், வாரிசு அரசியல் வாதிகள் நிறைந்ததாக, அளவற்ற பேராசை பிடித்தவர்களின் தலைமையில், ஜனநாயகத்தையும், மக்கள் நல ஆட்சிமையையும் மிகுந்த சேதத்திற்கு உள்ளாக்கி வருகிறது. அரசியல் அதிகாரம் ஒரு சில தண்டல்காரர்களிடமும், வழிப்பறிக் கொள்ளைகாரர்களிடமும் சிக்கி, நாடே சின்னாபின்னமாகி வருகிறது. போட்டியிடும் பெரும்பாலும் நேர்மையற்ற, சுயநலமிகள், தம்மையே பெருமைபடுத்திக் கொள்வோருக்குள்ளேயே ஒருவரை தேர்ந்தெடுக்க, மக்களை கட்டாயப் படுத்திவிட்டு, பண மூட்டைகளும், வியாபார முதலைகளும், அவர்தம் கைக்கூலிகளும் தங்களுக்கு அடிமை செய்யக் காத்திருக்கும் ஆமாம் சாமிகளை, ஃஜீபூம்பாக்களையே எல்லா ஆட்சி மன்றங்களுக்கும், நிர்வாகத்திலும் நியமித்து பொது சொத்தையெல்லாம் சூரையாடி, அவற்றை சொந்த சொத்தாக்கிக் கொண்டும், பிற்காலத்திற்கான அரசியல் முதலீடாக்கியும் வருங்கின்றனர்.
   தாங்களே ஜனநாயக மரபுப்படி தேர்ந்தெடுக்கப்படாத கட்சித் தலைவர்களால் நியமிக்கப்பட்ட, அவர்களுக்கு அடிமை செய்யும் தகுதியைத் தவிர வேறேதும் தகுதியற்ற, வேட்பாளர்கள், மக்களின் பிரதிநிதிகளாக எப்படி செயல்பட முடியும். அந்தத் தலைமைக்கும், அவர் பின்னின்று ஆட்டிவைக்கும் பண முதலைகளுக்கும் தான் பிரதிநிதிகளாக செயல்பட முடிகிறது. 
   தற்போதைய மோசமான நிலைமையிலிருந்த மீள ஒரு அவசர அறுவை சிகித்சை தேவைப்படுகிறது. களிம்பு பூசியோ, வில்லை உட்கொண்டோ தீரக்கூடிய வியாதியல்ல இது. நாடு ஒரு மனித உடல் என்று கொண்டால், அரசியல் அதில் ஓடும் குருதி எனலாம். அது முழுவதுமாக புற்றுநோய்வாய் பட்டிருக்கும் வேளையில் முழு ரக்த மாற்று சிகித்சைதான் நோயாளியை காக்கவல்லது.
   நாட்டு நிலைமையைப் பற்றிப் பேச ஆரம்பித்த உடன் ‘தேர்தல் முறை, நீதித்துறை, காவல்துறை சீர்திருத்தங்கள், லோக் பால், லோக் ஆயுக்தா, திரும்பி அழைக்கும் உரிமை, மக்கள் கருத்தறியும் உரிமை’ எல்லாம் கொண்டு வரவேண்டும் என்று சமூகஅரசியல் ஆர்வலர்கள் பெரிய பட்டியலை நீட்டுகிறார்கள். இவைகளின் மீது கட்டுக்கட்டாக பரிந்துரைகள் அரசு பெட்டகங்களில் மீளா உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கின்றன. ஊழலில் ஊறிக்கிடக்கும் அரசியல் வியாதிகளுக்கு எதிரான சீர்திருத்தங்களை அவர்களே நடை முறைபடுத்துவர் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? மக்கள் நலம் பேணும் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் வென்று ஆட்சி மன்றங்களுக்குச் சென்றாலன்றி இவை சாத்தியமாகாது? சொல்லப் போனால் உண்மையான மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால், அதன் பின் இப்போது தேவை என்று கருதப்படும் பல சீர்திருத்தங்கள் தேவையற்றே போய்விடும்.  
   மக்கள் நலம் விரும்பும் ஆர்வலர்களும், குழுக்களும் நேர்மையானவர்களை தேர்தலில் போட்டியிட நியமித்தும், ஒன்றிணைந்து பொது வேட்பாளர்களை நியமித்தும் முயன்றுவிட்டோம். இருப்பினும் மக்கள் அவர்களை சட்டை செய்வதில்லை. ஆர்வலர் குழுக்களுக்கும், சிறிய பிரபலமடையாத ஆனால் நேர்மையான கட்சிகளுக்கும் மக்களிடையே செல்வாக்கு மிகக் குறைவாக உள்ளது. அவர்களின் வேட்பாளர்கள் பெரிய வாக்காளர்கள் குழுக்கள் மூலம் தேர்வு செய்யப் படுவதில்லை. முடிவெடுக்கும் சிறு குழுக்களும் பெரும்பாலும் அந்தத் தொகுதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதில்லை. வாக்காளர்கள் இந்த வேட்பாளர்களை சொந்தம் கொண்டாட முடிவதில்லை. ஆக நேர்மையாளர்களை தேர்ந்தெடுத்து ஆட்சிமன்றங்களுக்கு அனுப்பும் நம் கனவு குறைப்ரசவமாகவே இருந்துவருகிறது. நம் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதை விடுத்து, நாம் வாக்காளர்களையே வேட்பாளர்களை தேர்வு செய்ய ஊக்குவித்தால் அவர்கள் வெல்வது உறுதியாகும்.    
   நாம் தேர்ந்தெடுத்து அனுப்புவோர் அரசியல் தண்டல்காரர்களுக்கும், கயவர்களுக்கும் அல்லாமல், நமக்குப் பிரதிநிதியாக செயல்படுவதை உறுதிசெய்ய, மக்களாகிய நாம் பல அடுக்குகளிலும் குழுக்களாகக் கூடி, நமக்குள்ளேயே தகுதியான பேராசை பிடித்தவரல்லாமல், நேர்மையானவர்களை தேடி, தேர்வு செய்து, நியமித்து, தேர்ந்தெடுத்து ஆட்சிமன்றங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டும். அப்படி செய்தால், அது ஒரு பிரதிந்தித்துவ ஜனநாயகமாக மட்டும் அல்லாமல் ஒரு பங்கேற்பு ஜனநாயகமாகவும் செயல்படும். நம் ஜனநாயகம் மேன்மையடைந்து ஆட்சியும் நிர்வாகமும் பெருத்த நல் மாற்றத்தை அடையும். பிரதிநிதிகளை திரும்ப அழைக்கும் உரிமை மற்றும் திட்டங்களுக்கும், சட்டங்களுக்கும் மக்களின் கருத்தை கணிக்கும் வாய்ப்பையும் உள்ளடக்கியதாக செயல்படும். மொத்தத்தில் ஆட்சி அதிகாரம் மக்கள் கையில் வந்தடையும். இந்த ஆட்சிமுறை மாற்றத்தை ஏற்படுத்த, எந்த சட்டத் சீர்திருத்தமும் தேவை இல்லை.
   இந்த மக்கள் ஆட்சியதிகாரம் பெறும் முறையை ஏற்படுத்த தெரு மக்கள் மன்றம் அமைத்து அடுத்த கட்டத்துக்கான – ஏரியா மன்றத்துக்கான - பிரதிநிதியை தேர்வு செய்து, இதேபோல் முறையே உள்ளாட்சி வார்ட், சட்டமன்றத் தொகுதி, நாடாளு மன்றத்தொகுதி மக்கள் மன்றங்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளை அமர்த்தி மேலும் கீழும் கலந்தாய்ந்து மக்கள் வேட்பாளர்களை எல்லா தளத்திற்கும் நியமிக்க வேண்டும். இதில் தேர்வுசெய்யப்படுவோர் எந்த வேரூன்றிய கட்சியையும் சாராதவராக, ஊழல் வாதியாக அல்லாமல் – நேர்மையானவராக – சமுதாயத்திற்கு தம்மால் ஆனதை செய்யத் தயாரானவராக, மொந்தைக்குடியனாக அல்லாதவராக இருப்பது மிக அவசியம். ஜாதி, மதம், இனம், கல்வி, சொத்து  முதலியன தகுதியாக ஏற்கப்படக்கூடாது.  
   நாட்டின் மூலை முடுக்குகளுக்கெல்லாம், ‘வாக்காளர்களே கூடி, தேடி, தெரிந்தெடுத்து, நியமித்து தேர்ந்தெடுப்பதன் மூலம், அரசியல் கயவர்களின் பிரதிநிதிகளுக்கு மாற்றாக, மக்களின் உண்மையான பிரதிநிதிகள் ஆட்சியில் அமர்வதன் அவசியத்தையும், அவசரத்தையும்’ பரவ செய்ய வேண்டும்.
   இன்று ஆர்வலர்கள் பலர் பொதுப் பிரச்சினைகளை கையிலெடுத்துப் போராடிவருகின்றனர். மேற்கண்ட மாற்றம் – நேரடி, அடிப்படை, பங்கேற்பு ஜனநாயகம் - ஏற்பட்டு விட்டால் – அதாவது ஜனநாயகத்தின் உண்மை தத்துவத்தை நடைமுறைப் படுத்தினோமேயானால், மற்ற பல பிரச்சினைகளுக்கும் தாமாகவே தீர்வு ஏற்படும். எப்படியும், மக்கள் மன்றங்கள் ஆட்சிமன்றங்களை, நிர்வாகத்தை கண்காணித்து, முறைப்படுத்த எப்போதும் தயார் நிலையில் இருக்கும். 
   இந்த செய்தியை நாடெங்கிலும் எடுத்துச்செல்ல அனைத்து சமூகஅரசியல் ஆர்வலர் குழுக்கள், சேவைக்குழுக்கள், என்ஜீஓக்கள் எல்லாம் இதில் ஈடுபட வேண்டும். இந்தக் குழுக்களெல்லாம் மற்ற குழுக்களின் மீது நம்பிக்கை இல்லாதிருப்பதனால், அவர்கள் ஒன்றிணையத் தேவையும் இல்லை. துவக்கத்தில் கை கோத்துப் பயணித்தால் போதும். நாளடைவில், குழுக்கள் ஒன்றோடொன்றாக இணைந்து, மக்கள் மன்றம் என்ற ஒன்றோடு ஐக்கியமாகிவிடும்.  
   என்னுடைய சிறிய அனுபவத்தில் மக்கள் இதை இரு கரம் நீட்டி ஏற்கத் தயாராக உள்ளனர் என்பதை உறுதியாகக் கூற முடியும்.  தடைகள் இல்லாமல் இல்லை. கை நீட்டிப் பணம் வாங்கிய பின் எப்படி அவர்களுக்கு வாக்களிக்காமல் இருப்பது என்று கேட்கின்றனர். வோட்டுக்கு பணம் பெருவது சட்ட விரோதம் மட்டுமல்ல, மஹாபாவமும் கூட என்று புரிய வைக்க வேண்டியுள்ளது. அதனால் விளையும் தீமைகளை விளக்கி. ‘கை நீட்டி பணம் பெற்றிருந்தால் கூட, அவர்களின் இந்த தீய செயலினால், அவர்களை நமக்குப் பிடித்திருந்தால் கூட, அவர்களுக்கு வாக்களிக்கக்கூடாது’ என்று விளக்க வேண்டியுள்ளது. அவர்கள் ‘குழந்தைகளின் தலையில் கையை வைத்து சத்தியம் வாங்குகிறார்கள். சத்தியத்தை எப்படி மீறுவது’ என்று அடுத்த கணையை வீசுகிறார்கள். அவர்களுக்கு ‘அப்படி சத்தியம் செய்வது தவறு. ஆனால் அவர்களைக் கண்டு பயந்து செய்ய நேரிட்டால், நாம் மனதில் நினைக்கும் சத்தியத்தைத்தான் கடை பிடிக்க வேண்டுமே தவிர, உதடு சொல்வதை அல்ல. மனதில் ‘நீ எங்களை ஏமாற்றப்பார்க்கிராய். என் வாக்கு உனக்கல்ல என்று கூறி, உதட்டால் உனக்குத்தான் அளிப்பேன்’ என்று கூறுங்கள். அப்படியும் கூறியதை மீற அஞ்சினால், நோடாவுக்கு அளித்தோ, வாக்கு அளிக்காமலோ மன சத்தியத்தை அனுசரியுங்கள்’ என்று கூற வேண்டியுள்ளது.
   மஹாத்மா காந்தி பிரிட்டன் ஒரு வலியசக்தி. அவர்கள் களத்திலேயே, அவர்களைப் போலேயே ஆயுதம் தாங்கி, எதிர்த்து வெல்வது சாத்தியமல்ல என்று உணர்ந்து, சத்தியாக்ரஹம் என்ற வெல்ல முடியாத ஆயுதத்தை படைத்தார். இன்றைய அரசியல் கயவர்களும் மிக சக்தி வாய்ந்தவர்கள்தாம். அவர்களை அவர்கள் களத்திலேயே, அதுவும் அவர்கள் பீரங்கியும், ஏவுகணையும் கொண்டு தாக்க, நாம் வில் அம்பு, ஈட்டி தாங்கி எதிர்கொள்ள முடியாது. நமக்கு சத்யாக்ரஹம் போன்ற சர்வ வல்லமை வாய்ந்த ஆயுதம் தேவைப்படுகிறது. அதுதான் மக்களே ‘கூடி, தேடி, தெரிந்தெடுத்து, நியமித்து, தேர்ந்தெடுக்கும்’ முறையில் ‘ஆட்சி அதிகாரம் பெறுவது’.           
   மக்களுக்கு இதை எடுத்துரைப்பதும், அவர்களுக்கு இப்படி செய்ய உதவுவதும் தான்  சமூகஅரசியல் ஆர்வலர்களும், சிறு நேர்மைவாத கட்சிகளும் ஆற்றவேண்டிய உண்மையான கடமை. எப்படியும் நாம் அரசியலுக்கு அரசியல் செய்ய வரவில்லையே. அரசியலை நேர்படுத்த, சீர்படுத்த, மேம்படுத்த, தூய்மைப்படுத்தத்தானே வந்துள்ளோம்.
   மக்களிடம் அரசியல் விழிப்புணர்வு சிலகாலமாக அதிகரித்து வருகிறது. மதுக்கடைகளை மூட வைக்கும் முயற்சி, அணுமின் நிலையங்கள் போன்றவற்றை எதிர்ப்பது, நீர்நிலைகளை தாங்களே முன் வந்து தூர்வாருவது, வெள்ளம், புயல் சமயங்களில் தாங்களாகவே முன் வந்து மீட்புப் பணிகளில் ஈடுபடுவது என்று அவர்கள் அரசியல் வியாதிகள் மீது நம்பிக்கை இழந்து விட்டனர் என்பதை தெள்ளத்தெளிவாக வெளிப்படுத்துகின்றனர். இது வரும் காலங்களில் இன்னும் பல அரசியல் கட்சிகள் தோன்றவும், சுயாச்சையாக பலரும் தேர்தல் களத்தில் குதிக்கவும் வழிவகுத்துள்ளது. ஆனால் இவர்களுக்கெல்லாம் களத்தில் வெல்லத் தேவையான செல்வாக்கு கிடையாது. மற்றும் அவர்களுக்குள்ளேயே போட்டியும் பொறாமையும் சேர்ந்து, இந்த அரசியல் கோலியத்துக்களை அசைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களிடம் சென்று ‘எனக்கு வாக்களியுங்கள்’, ‘எங்கள் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள்’ என்று கேட்டுப் பயனில்லை என்பதை அனுபவத்தில் உணர்ந்துள்ளோம். அவர்களோ ‘தெரியாத தேவதையைவிட தெரிந்த பேயே மேல்’ என்றே முடிவெடுக்கிறார்கள். அவர்களையே அவர்களின் வேட்பாளர்களை தேர்வு செய்ய அறிவுறுத்துவதன் மூலம் நாம் எப்படிப்பட்ட கோலியத்தையும் வீழ்த்த முடியும். இதுதான் ஆர்வலர்களின் சரியான பயனளிக்கக்கூடிய செயலாக இருக்கும். எப்படியும் அவர்களும் சமூக ஆர்வலர்களைத்தான் தேர்வு செய்ய வாய்ப்பு அதிகம். ‘அவர்கள் தேர்வு நாமாக இருப்பின், கடமையின் அழைப்பாக ஏற்று பணியாற்றுவோம். நாமாக இல்லையெனினும் அவர்கள் தீர்ப்பை ஏற்று அவர்களுடன் இணைந்து நற்பணிகளில் நம் பயணத்தை தொடருவோம் என்ற தெளிவு’ ஏற்படவேண்டும்.
   இதன் செயலாக்கத்தில் பல ஆர்வலர் குழுக்கள், பணிகளை துவக்கி வீறுநடை போட்டு வருகின்றனர். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் துவங்கி, சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களிலும் இதை செய்ய முனைந்து வருகின்றனர். பல இடங்களில் ஆர்வலர்கள் தீவிர ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார்கள். இந்தத் தறிகெட்டுச் சென்று கொண்டிருக்கும் அரசியலை கட்டுக்குள் கொண்டுவர இச்செய்தியை நாடுமுழுவதும் பரவச்செய்ய அனைத்து ஆர்வலர்களின் ஒருங்கிணைந்த முயற்சி தேவை.
   இது வெறும் பகல் கனவல்ல. மஹாராஷ்ட்ராவில் நக்சல் தீவிரவாதத்தின் உறைவிடமான காட்சிரோலி மாவட்டத்திலேயே மக்கள் உள்ளாட்சி மன்றங்களுக்கு தங்கள் பிரதிநிதிகளை தாங்களே தேர்ந்தெடுத்து ஒரு புரட்சியையே செய்துள்ளனர். நக்சல் பாதிப்புக்குள்ளான இடத்திலேயே இதை செய்ய முடிந்தால் மற்ற இடங்களில் ஏன் முடியாது. இன்னும் பலவிடங்களிலும் நடந்து வருகின்றன. ஆனால் இதை அங்கொன்றும் இங்கொன்றுமாக நின்றுவிடாமல் அனைத்து இடங்களிலும் நடக்கச் செய்ய வேண்டியது நம் கடமை.
     நம் உரிமையை தறிகெட்ட அரசியலாரிடமிருந்து மீட்டெடுக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. 
                                                                                                                                    By K. Raja Rajan
[A technologist by qualification, farmer by option and Gandhian by conviction]
Gandhian Initiative for Social Transformation,
Cell: 94441 60839,        E mail: letsbelldcat@gmail.com,
Blog: prithvi-mithra.blogspot.in,         Face book: Raja Rajan. K

Saturday, August 25, 2018

மக்கள் மன்றம் 2


அரசியலாரிடமிருந்து நம் உரிமையை காப்போம்:

பங்கேற்புமுறை ஜனநாயகத்திற்கு பயணிப்பதைப் பற்றிய என் முந்தைய பதிவின் தொடற்சி.
5 தளங்கள் (லெவல்) முறையே 250, 2,500, 25,000, 250,000, 1,500,000 வாக்காளர்களுக்கான மக்கள் மன்றங்கள் அமைத்து மக்கள் வெட்பாளர்களை தேர்வு செய்வதைப் பற்றிக் கூறியிருந்தேன். அந்தக் குழுக்கள் மேலும் கீழுமாக கலந்தாய்ந்து வேட்பாளரை தேர்வு செய்வார்கள் என்று கூறியிருந்தேன். அதையும் எப்படி முறைப்படுத்துவது என்ற என் சிந்தனையை இங்கு அளிக்கின்றேன்.

லெவல் 1 இல் – 250 வாக்காளர்களின், (60 வீடுகளின்) ப்ரதிநிதிகள் கூடி அந்த 250 பேருக்கான ப்ரதிநிதியைத்தான் தேர்ந்தெடுத்து அடுத்த லெவலுக்கு அனுப்புவார்கள் – மொத்த தொகுதிக்குமான வேட்பாளர் பரிந்துரையை அல்ல.
இதே போல் அடுத்தடுத்த லெவலுக்கும் ப்ரதிநிதிகள் அனுப்பப்படுவர்.

சட்டமன்ற வேட்பாளரை தேர்வு செய்ய – ஒவ்வொரு தொகுதி மக்கள் மன்றத்திலும் (லெவல் 4 இல்) உள்ள
10 ப்ரதிநிதிகள் கலந்து 6 – 8 வேட்பாளர்கள் பரிந்துரைப் பட்டியல் தயாரித்து, அவர்களை சந்தித்து அவர்களின் ஒப்புதலின் பேரில், 5 பெயரை எந்த வரிசையிலும் இல்லாமல் – அல்ஃபபெடிகல் ஆர்டரில் (அல்) மட்டும் – லெவல் (லெ) 3 க்கு (10 குழுக்களுக்கு) அனுப்புவர். இந்த வேட்பாளர் பட்டியலுக்கு மன்றப்ரதிநிதிகளை தவிர்த்து தொகுதியில் வசிக்கும் மற்றவர்களிலிருந்ததான் தேர்வு செய்ய வேண்டும். இது உள் அரசியலை தவிர்பதற்கான ஏற்பாடு. தகுதிகள் மன்ற ப்ரதிநிதிகளுக்கு முன் கூறிய முறையில் இருத்தல் வேண்டும்.

லெ 3 இல் ஒவ்வொரு குழுவிலும் உள்ள 10 பேர், பேசி 4 பெயரை வரிசைப்படுத்தி – முதல், இரண்டாம், மூன்றாம் ப்ரிஃபரென்ஸ் (ப்ரி) என்று எழுதி மீண்டும் லெ 4 க்கு அனுப்புவர். லெ 4 இல், 10 லெ 3 குழுக்களின் தேர்வையும், முதல் ப்ரிக்கு 100%, இரண்டிற்கு 50% மூன்றிற்கு 25% என்று கொண்டு, கூட்டி புதுப்பட்டியல் தயாரித்து அதிலிருந்து முதல் 4 ப்ரியை மட்டும் – அல் - லெ 2 (100 குழுக்கள்) க்கு லெ 3 இன் வழியே அனுப்புவர்.

லெ 2 இல் தங்கள் தேர்வை மேற்கூறியது போல் 3 ப்ரியை மீண்டும் லெ 1 க்கு 3 இன் வழியே அனுப்புவர். லெ 4 இல் மேற்கூறியது போல் கூட்டி, 3 ப்ரியை மட்டும் – அல் – லெ 1 (1000 குழுக்கள்) க்கு அனுப்புவர்.

லெ 1 இல் கூடிப்பேசி, குரல் தேர்வு மூலம், இரண்டு பெயரை வரிசைப் படுத்தி மீண்டும் லெ 2, லெ 3 வழியே லெ 4 க்கு அனுப்புவர். லெ 4 இல் மேற்கூறியது போல் கூட்டி, முதல் மற்றும் இரண்டாம் ப்ரியை தேர்வு செய்வர். முதலாமவர் தான் மக்கள் வேட்பாளராக களம் இறங்கப் போகிறவர். இரண்டாமவர் முதலாமவர் பின்வாங்கும் அல்லது நியமனம் நிராகறிக்கப்படும் பக்ஷத்தில் மக்கள் வேட்பாளராக களம் இரங்குவார்.

நாடாளுமன்ற வேட்பாளர் தேர்தலுக்கு மேற்கண்ட முறையில் லெ 5 இல் துவங்கி செயல்படுத்த வேண்டும்.

அடிப்படையில் இந்த செயல் முறையில் வேட்பாளர்கள் சேவைக்காக – கொள்ளையடிக்க அல்லாமல் -தேர்தெடுக்கப்படுவதால், அவர்களுக்கு இது ஒரு வரமல்ல, ஒரு சுமைதான். அதனால் இதற்கு நேர்மையானவர்கள் மட்டுமே முன்வருவர். அவர்கள் பதவி கிடைத்தாலும், கிடைக்காவிடாலும் சேவையை தொடரும் மனம் படைத்தவர்களாக இருப்பார்கள். அதனால் இந்த தேர்வில் பெரும் போட்டியும், சிக்கல்களும் இருக்காது.

இதில் முக்கிய மான வேலையே மக்களை கூட்டுவதுதான். ஆனால் சிறு குழுக்களாக – 250 வாக்காளர்கள், 60 வீடுகளில் – கூட்டுவது அவ்வளவு கடினமல்ல. மக்களுக்கு தங்கள் ப்ரதிநிதியாகப் போகிறவரை தாங்களே தேர்வு செய்யப் போகிறோம் என்ற சிந்தனை ஏற்பட்டவுடன் அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இதில் ஈடுபட முன்வருவர்.

அரசியல் கட்சிகள் மக்களின் ஒற்றுமையை உடைக்க முற்படுவர். ஆனால் மக்களின் எழுச்சிக் கோலத்தைக் கண்டு அவர்களுக்கு மிரண்டு ஓடுவதைத் தவிர வேறு வழியிருக்காது.

மக்கள் கொதித்தெழுந்தால் சாம்ராஜ்யங்கள் வீழ்ச்சியடையும் என்பதற்கு சரித்திரத்தில் பல சான்றுகள் உள்ளன.

இன்னும் என்ன தயக்கம் தோழர்களே? வாருங்கள் கையில் ஒளிதீபம் ஏந்தி!

அசத்தியத்திலிருந்து சத்தியத்திற்கும், அறியாமையிலிருந்து அறிவுடமைக்கும் (இருளிலிருந்து வெளிச்சத்திற்கும்), அழிவிலிருந்து அழியா நிலைக்கும், எம்மை வழிநடத்துவாய் ஆண்டவனே – உபநிஷத்.


Thursday, August 23, 2018

மக்கள் மன்றங்கள்


மக்கள் மன்றங்கள்
அமைப்பின் சுறுக்கம். தமிழ் நாட்டை உதாரணமாகக் கொண்டது.

தளம் 5 – நாடாளுமன்றத் தொகுதி மக்கள் மன்றம் – 1,500,000 வாக்காளர்களின் ப்ரதிநிதித்துவம் கொண்டது – அந்த நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளின் ப்ரதிநிதிகள் கொண்டது.
தளம் 4 – மாநில சட்டமன்றத் தொகுதி மக்கள் மன்றம் – 250,000 – 10 தளம் 3 - பெரிய ஏரியா மம ப்ரதிநிதிகள்.
தளம் 3 – பெரிய ஏரியா மக்கள் மன்றம் – சென்னையில் உள்ளாட்சி வார்ட் – சிறிய நகரங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட வார்டுகள். க்ராமப்பகுதிகளில் 8 – 10 க்ராமங்கள் – 25000 – 10 தளம் 2 – ஏரியா மம ப்ரதிநிதிகள்.
தளம் 2 – ஏரியா மக்கள் மன்றம் – க்ராமங்களில் க்ராம மம – 2500 – 10 தளம் 1 – தெரு/ குடியிருப்பு/ க்ராம வார்ட் மம.
தளம் 1 – தெரு, அடுக்கு மாடிக் குடியிருப்பு, க்ராம வார்ட் மக்கள் மன்றம் – 200 – 250 வாக்காளர்கள் (60 – 75 குடும்பங்கள்)

தளம் 3,2,1 இல் வார்ட்களின் வாக்காளர் தொகைக்குத் தகுந்து எண்ணிக்கை மாறுபடும்.
உதா: ஒரு க்ராமத்தில் 450 பேர் கொண்ட வார்ட் என்றால், இரண்டு குழுவாக 225 வாக்காளர்கள் கொண்டதாக தளம் 1 இருக்கும்.
5000 பேர் கொண்ட க்ராமத்தில், 18 - 20 குழுக்களாக செயல்படும். தளம் 2 இல் 5000 பேரை – க்ராம வாக்காளர்களை - குறிக்கும். 
15000 பேர் கொண்ட வார்ட் உள்ள நகரங்களில் தளம் 3 க்கு, தளம் 2 இலிருந்து 6 ப்ரதிநிதிகள்.

மற்ற மாநிலங்களில் தளம் 4 இல் சட்ட மன்றத் தொகுதி வாக்காளர்களை கொண்டதாக இருக்கும். உதா: சமதொ வுக்கு 1 லக்ஷம் வாக்காளர்கள் என்றால், தளம் 4 மம 1 ல வை குறிக்கும். தளம் 5 க்கு, 15 த 4 ப்ரதிநிதிகள்.   

தளம் 1 இலிருந்து ஒரு ப்ரதிநிதி (அவர்களுக்குள்ளேயே) தேர்வு செய்து தளம் 2 க்கு அனுப்ப வேண்டும். அதே போல் 2 இலிருந்து, 3 க்கும், 3 இலிருந்து 4 க்கும், 4 இலிருந்து 5 க்கும்.

தளம் 5 மம உறுப்பினர்கள் அந்த நாடாளுமன்றத் தொகுதிக்கு மக்கள் வேட்பாளரை தேர்வு செய்வர். 2 - 3 பேரை பரிந்துரைத்து கீழே உள்ள தளங்களுடன் கலந்தாய்ந்து, அவர்களின் பரிந்துரை பெற்று இறுதியான தேர்வு செய்யப்படும்.
இதே போல் தளம் 4 மம உறுப்பினர்கள் அந்த சட்ட மன்றத்திற்கும், தளம் 3 மம உறுபினர்கள் நகரங்களில் உள்ளாட்சிமன்றத் தொகுதிக்கும், தளம் 2 மம சிற்றூர்களிலும், தளம் 1 மம க்ராமங்களின் வார்ட் வேட்பாளர்களையும் தேர்வு செய்வர்.  

வேட்பாளர் தேர்வைத் தவிர இவர்கள் மக்களுக்கும் அரசுக்கும் இடையே ஒரு பாலமாகவும், அரசு செயலிழந்த தருணக்களில் பொதுப் பணிகளை முன்வந்து செய்யவும், அரசு பணிகளில் அரசுக்கு உருதுணையாகவும், அரசு ஊழலின்றி செயல்பட கண்காணிப்பாளர்களாகவும்இருக்கத் தகுதி படைத்தவர்களாக இருப்பார்கள்.

இதனால் ஒரு வலிமையான மக்கள் நலக் கட்டமைப்பு உருவாகும். மக்கள் ஆதரவின்றி, மக்கள் விரோதமாக எந்த ஆட்சியாளரும், செயல்பட முடியாது. மம ப்ரதிநிதிகள் கூட மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்களை அகற்றும் உரிமை அவர்களை தேர்வு செய்த வாக்காளர்களுக்கு இருக்கும். அரசு சட்டங்கள், திட்டங்களுக்கு இந்த அமைப்பின் மூலம் கருத்துக் கணிப்பு செய்ய முடியும். 

இந்த மக்கள் மன்றங்கள் அமைப்பு ஏற்படுத்த எந்த வித சட்ட மாற்றமும் – அரசியல் சாசனத்திலோ, ஆர் பீ ஏ விலோ தேவை இல்லை.
இந்த அமைப்பை உருவாக்குவதன் மூலம் நாம் உலகுக்கே ஒரு சீரிய உதாரணமாகத் திகழ்வோம்.

இன்னும் என்ன தயக்கம்?

மேலும் விவரம் இந்த ப்ளாக்கின் மற்றொரு பதிவில்.

ராஜ ராஜன்
(A technologist by qualification, farmer by option and a Gandhian by conviction)
காந்தீய சமுதாய மேம்பாட்டு முனைப்பு
தொ பே: 94441 60839,     மின் அஞ்சல்: letsbelldcat@gmail.com
முகநூல்: Raja Rajan K,    ப்ளாக்: prithvi-mithra.blogspot.in

அரசியலாரிடமிருந்து நம் உரிமையை காப்போம்:


தோழர்களே!

பாராளுமன்றம், சட்ட மன்றங்கள், உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் வெகு தொலைவில் எப்போதும் இருப்பதில்லை. நாம் பலகாலமாக ஏங்கிவரும் ‘தீய அரசியலிலிருந்து தூய அரசியலுக்கு பயணிக்க’ த் தேவையான வழித்தட வரைவு கீழே அளிக்கப்பட்டுள்ளது.

சமூக அரசியல் ஆர்வலர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தனித்தும், கூடியும் இந்தப் பயணத்தைத் துவக்கி தேர்தல்கள் வருமுன் தயார் நிலையில் இருப்பது மிக அவசியம்.

அரசியலாரிடமிருந்து நம் உரிமையை காப்போம்:
‘மக்கள் சுய ஆட்சி அதிகாரம்’ பெற – ‘கூடி, தேடி, தெரிந்தெடுத்து, நியமித்து, தேர்ந்தெடுக்கும் முறை’
செயல் வரைவு:

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள எல்லா சமூக அரசியல் ஆர்வலர்களும் கூடிப்பேசி செயல்படுத்த வேண்டிய விரிவான வழித்தட வரைவு இயற்ற வேண்டும்.

‘வேரூன்றிய கட்சித்தலைமை நியமிக்கும் வெட்பாளர்களால், அந்த கட்சிக்கும் அவர்கள் பின்நின்று ஆட்டுவிக்கும் பண மூட்டைகளுக்கும்தான் அவர்கள் செய்யும் ஊழலுக்கும், அராஜகத்திற்கும், ப்ரதிநிதிகளாக செயல்பட முடியும் என்பதனால் அவர்களை நிராகரித்து, மாற்றாக வாக்காளர்கள் தங்களுக்குள்ளேயே ‘தேடி, தெரிந்தெடுத்து’, தகுதியான வேட்பாளர்களை ‘நியமித்து, தேர்ந்தெடுத்தால்’ அவர்கள் மக்களின் உண்மையான ப்ரதிநிதிகளாக செயல்பட வைக்க முடியும். இதனால் நாம் பங்கேற்பு முறை ஜனநாயகத்திற்கு மற்றும் மக்கள் நல ஆட்சிக்கு மேம்பட முடியும்’, என்ற செய்தியை மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும்:

சமூக வலைதளங்கள், மின்/ அச்சு ஊடங்கள் மூலம் இதைப் பற்றிய செய்திகளை பரப்புரை செய்ய வேண்டும். வீடியோ, பென் ட்ரைவ், லேப்டாப், ப்ரொஜெக்டர் மூலமும் பரப்புரை செய்ய வேண்டும்.

மிக முக்கியமாக பல லக்ஷம் கையேடுகள் அச்சடித்து – சுறுக்கமானதாக சராசரி வாக்காளர்களுக்கும், விரிவானதாக தொகுதிகளில் இந்தப் பணியாற்றக் கூடிய ஆர்வலர்களுக்கும் வழங்கவேண்டும். இதற்கான வரைவு, என்னிடமிருந்தும், உடன் பணிபுறிவோரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களை சிறு குழுக்களாக – 200 லிருந்து 250 வரை, 60 – 75 வீடுகளில் வசிப்பவர்களை ‘மக்கள் மன்றம் - தளம் 1’, ஆக கூட்ட வேண்டும். நகரங்களில் இது ‘தெரு மன்றங்கள்’ ஆகவும், அடுக்கு மாடி குடியிருப்பு மன்றங்கள்’ ஆகவும், க்ராமப்புரங்களில் ‘பஞ்சாயத் வார்ட் மன்றம்’ ஆகவும் இருக்கும்.

இந்த மன்றங்களின் கூட்டங்கள் நடத்தி அவர்களுக்குள் ஒருவரை தேர்வு செய்து அடுத்த தளத்திற்கு தளம் 1 இன் ப்ரதிநிதியாக அனுப்ப வேண்டும். இந்த அடுத்த தளம் – 2, நகரங்களில் ‘ஏரியா மக்கள் மன்றம்’ ஆகவும், க்ராமங்களில் ‘க்ராம மக்கள் மன்றம்’ ஆகவும் இருக்கும். நல்ல பங்கேற்பை உறுதி செய்ய, 2 – 3 அமர்வுக்குப் பிறகு தேர்வுகள் செய்ய வேண்டும்.

இந்தப் ப்ரதிநிதித் தேர்வுக்கான அடிப்படை தகுதிகள்,
அவர் அந்த தெரு, குடியிருப்பு, வார்டில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.   
எந்த முன்னணி – வேரூன்றிய – அரசியல் கட்சி உருப்பினராக அல்லது ஆதரவாளராக இருத்தல் கூடாது.
அடிப்படையில் நேர்மையான, ஊழல்வாதியாக அல்லாதவராக இருத்தல் வேண்டும்.
சமுக, பொதுநலப் பணிகளில் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.
மொந்தைக் குடியனாக இருத்தல் கூடாது.

ஜாதி, மத, இன, மொழி, கல்வி, சொத்து போன்றவை தகுதியாக ஏற்கப்படக் கூடாது.

இந்த தளம் 2 ஏரியா மன்றங்கள், தளம் 1 இலிருந்து 10 ப்ரதிநிதிகள் போல் கொண்டதாக இருக்கும் – 2000 – 2500 வாக்காளர்களின் ப்ரதிநிதித்துவத்துடன்.

இதிலிருந்து முன்பு கூறிய முறையில் அடுத்த – ‘பெரிய ஏரியா மன்றங்கள் – தளம் 3’ – க்கு 10 ஏரியா மன்றங்களின் ப்ரதிநிதிகள் போல் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். தளம் 3 – 20000 – 25000 வாக்காளர்களின் ப்ரதிநிதித்துவத்துடன் செயல்படும்.  

சென்னை போன்ற பெரு நகரங்களில் தளம் 3, வார்ட் மன்றங்களாக இருக்கும். சிறு நகரங்களில் தளம் 3 இல் சில வார்ட்கள் கொண்டதாக இருக்கும். துணை மன்றங்களாக ஒவ்வொரு வார்டுக்கும் மன்றங்கள் அமையும். அவை உள்ளாட்சித் தேர்தலில் வார்ட்களுக்கு மக்கள் வேட்பாளர்கள் தேர்வுச் செய்யும்.

தளம் 3 இலிருந்து ப்ரதிநிதிகள் ‘சட்டமன்ற மக்கள் மன்றங்கள் – தளம் 4’ – க்கு தேர்வு செய்யப்படும். தமிழ் நாட்டில் இது 250,000 வாக்காளர்களின் ப்ரதிநிதித்துவம் கொண்டதாக இருக்கும். தளம் 3 இலிருந்து 10 ப்ரதிநிதிகள் தளம் 4 இல் அமர்வர். மற்ற மானிலங்களில் சட்ட மன்ற வாக்காளர்கள் எண்ணிக்கையை பொருத்து தளம் 3 மற்றும் தளம் 4 க்கு உறுப்பினர் எண்ணிக்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.  உதாரணமாக: 150,000 உறுப்பினர் கொண்ட சட்டமன்றம் கொண்ட மாநிலத்தில் தளம் 4 இல் 8 உறுப்பினர்கள் தளம் 3 இலிருந்து – 19000 வாக்காளர்களின் ப்ரதிநிதியாக, மற்றும் தளம் 3 இல் 8 - 9 உறுப்பினர்கள் தளம் 2 இலிருந்து – 2375 – 2110 வாக்காளர்களுக்குப் ப்ரதிநிதியாக அமைவர்..

நாடாளுமன்ற மக்கள்மன்றம் - தளம் 5 – இல், தளம் 4 இலிருந்து தேர்வு செய்யபட்ட ப்ரதிநிதிகள் பங்கேற்பர். தமிழ் நாட்டில் இதில் 6 ப்ரதிநிதிகள் இருப்பர். இது 1,500,000 வாக்காளர்களுக்கான ப்ரதிநிதித்துவம் பெற்ற தளம். 

இந்த மன்றங்கள் மேலும் கீழுமாக தேடி, ஆய்ந்து, மக்களின் வேட்பாளர்களை, மூன்று தள ஆட்சிமன்றங்களுக்கும் நியமிக்கும். ஒருமனதாக தேர்வு செய்ய முயற்சி செய்ய வேண்டும். அப்படி முடியாத நிலையில், தேர்தல் முறையில் முடிவுகள் எடுக்கலாம்.

தேர்தல் சமயத்தில் நியமனம் நிராகறிக்கப்படுவதை, மற்றும் கடைசி நிமிஷத்தில் வேட்பாளர் விலகிக் கொள்வதை, ஈடு செய்ய, ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு பேர் தேர்வு செய்து, ஒரு வேளை முதலாமவரின் நியமனம் நிராகறிக்கப்பட்டால், அல்லது அவர் விலகினால், இரண்டாமவர் மக்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும்.

தேர்தலின் போது சாதாரணக் காகிதத்தில் ஒருவண்ண நோட்டீஸ் மூலம் மக்கள் வேட்பாளர் யார் என்பதை அறிவித்தால் போதும். பலவண்ணக் கையேடுகள், பகட்டான பரப்புரைகளெல்லாம் தேவைப்படாது. இவை தேர்தல் செலவை வெகுவாகக் குறைக்க உதவும். 

தேர்தலில் குளருபடி செய்து மக்கள் வேட்பாளர்கள் வெற்றிபெற முடியாமல் தடுக்கப்பட்டாலும், இந்த வேட்பாளர்கள் தான் மக்களின் முடிசூடா ப்ரதிநிதிகளாக ஏற்கப்படுவர். மக்கள் தங்கள் ப்ரச்னைகளை இவர்களிடம்தான் கொண்டு செல்வார்கள். இவர்கள் மக்களின் ப்ரச்னைகளைப் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல அங்கீகறிக்கபடுவர். நாளடைவில் கட்சி நாமஉ, சமஉ வெல்லாம் மக்களிடம் மதிப்பிழந்து உதிர்ந்து போகும் நிலை ஏற்படும். மக்கள் வேட்பாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகும்.

மக்கள் மன்றங்கள் முறையான பதிவு பெற்று நடை முறையில் ஏற்றுக் கொள்ளப் பட்டு, அடிக்கடி கூடி விவாதித்து பொதுப் பணிகளில் முடிவுகளெடுக்க முடியும். மக்கள் வேட்பாளர்கள் ஆட்சிமன்றங்களில் பெரும்பான்மை பெற்றதும் அரசியல் சாசனம், ஆர் பீ ஏ போன்றவற்றில் தேவையான சட்ட மாற்றங்களை கொண்டு வந்து மக்கள் மன்றங்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்க முடியும். 

இந்த மன்றங்கள் நம் ஆட்சிமன்ற ப்ரதிநிதிகளை தேர்வு செய்வது மற்றும் கண்காணிப்பதைத் தவிர தினப்படி ப்ரச்னைகளை – குப்பை அகற்றுதல், குடிநீர், வடிகால், சுத்தம் செய்தல், நீர்நிலைகள், நீர்வழிகளை தூர்வாரி பராமரிப்பது, சாலை, கல்விச்சாலைகள், மருத்துவ சாலைகள் பராமரிப்பு, என்று அனைத்திலும் மக்களின் தேவைக்கும் அரசு யந்த்ரத்திற்கும் இடையே பாலமாக செயல்படும்.

அதிகாரம் படைத்தவர்கள் தங்கள் பணியை செய்யத் தவரும் போது மக்கள் மன்றங்களே அவற்றை முன்வந்து செய்து, பின் அரசிடமிருந்து வரிவிலக்கு பெற்று நிலைமையை சரிசெய்து கொள்ளும். அரசின் கொள்கைகள், செயல்பாடுகளினால் ஏற்படும் தீமைகளை தவிர்க்க இந்த அமைப்பு பேருதவியாக இருக்கும்.

ஆக, மக்கள் வேட்பாளர்கள் ஆட்சி மன்றங்களில் சென்றமருமுன்னறே, ஆட்சி அதிகாரம் மக்கள் கையில் நேரடியாக வந்து சேரும்.

ஸ்டெர்லைட், 8 வழி சாலை, கூடங்குளம், நூட்ரினோ, வெள்ளம், புயல், வரட்சி, ஆழிப்பேரலை, எதுவாக இருப்பினும், அரசு தன் கடமையை செய்கிறதோ, இல்லையோ, இந்த மக்கள் மன்றங்கள் முன்நின்று மக்கள் உரிமையை பாதுகாப்பதும், மீட்பு, மீளமைப்பு என்று எல்லா வகையிலும் மக்கள் நலனுக்காகப் பாடுபடும்.

இதுதான் மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் உண்மையான ஜனநாயகமாகப் பரிமளிக்கும். இதை செய்ய அரசியல் சாசனத்திலோ, ஆர் பீ ஏ விலொ வேறு எந்தச் சட்டத்திலும் எந்தவித மாறுதலும் தேவை இல்லை.

இதன் மூலம் ப்ரதிநிதித்துவ ஜனநாயகத்திலிருந்து, உன்னதமான பங்கேற்புமுறை ஜனநாயகத்திற்கு மேம்படுவோம்.

திரும்பி அழைக்கும் உரிமையும், சட்ட திட்டங்களுக்கு மக்களின் ஆதரவை, அங்கீகாரத்தை கணிக்கும் வசதியும் இதன் மூலம் உபரியாகக் கிடைக்கும். ஜனநாயகத்தின் உண்மையான பலனை அனுபவிக்க முடியும்.

உலகமே நம்மைப் பார்த்து பொறாமைப்படும், நம்மை பின்பற்ற எத்தனிக்கும்.

சில செய்ய வேண்டியன, செய்யக்கூடாதன:
நம்மை நாமே முன்னிருத்தக்கூடாது.
நம்மையும், நம் சொந்தத் தேர்வையும் மக்கள் ப்ரதிநிதியாக ஒருபோதும் திணிக்க முற்படக்கூடாது. மக்கள் நம் தேர்வை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை.
அவர்களே தேர்வு செய்யட்டும். அப்போதுதான் அவர்கள் அந்த வேட்பாளர்களை சொந்தம் கொண்டாடி வெற்றிபெறச் செய்வர்.
நாம் பின்னிருந்து மக்களுக்கு உதவ, ஊக்குவிக்க மட்டும் வேண்டும்.
ஆர்வலர்களுக்குள்ளும் மன்றனங்களிலும் பூசல்களை தவிர்க்கவேண்டும். எப்போதும் ஒருமனதாக தேர்வு செய்வதும், முடிவெடுப்பதும் தான் நன்மை பயக்கும்.
மொழி, இன, ஜாதி, மத, வர்க அடையாளங்களை தவிர்க்கவும். ப்ரதிநிதிகள் மக்களின் பொதுவான நன்மையையே முன்னிருத்திப் பணியாற்ற வேண்டும்.
தம்மைத் தாமே நியமித்துக் கொள்வதையும், சிபாரிசு செய்வதையும் ஊக்குவிக்கக் கூடாது.
நாம் - ஆர்வலர்கள் – கூட்டங்களை கூட்டுவது, நடவடிக்கைகளை கண்காணிப்பது, வழிகாட்டுவது தவிர நேரடியாக ப்ரதிநிதிகளை தேர்வு செய்வதில் ஈடுபடக்கூடாது.

பயணத்தைத் துவங்குவோமா தோழர்களே?

K. Raja Rajan   

(A technologist by qualification, farmer by option and a Gandhian by conviction)
President – Gandhian Initiative for Social Transformation - Chennai
Ph: 94441 60839,  Email: letsbelldcat@gmail.com
Face book: Raja Rajan K,   Blog: prithvi-mithra.blogspot.in

Saturday, August 27, 2016

Continuously Evolving Democracy

Towards a Continuously Evolving Democracy
     Right to reject having become a reality with the introduction of NOTA – toothless though – Right to recall and Referendum are to be addressed still.
    Mr. P.V.Narasimha Rao, after getting elected professing to pursue the policies of Congress party and carrying on the party’s legacy, betrayed the people by his somersault in 1991 by introducing ‘LPG (Liberalization, Privatization, Globalization) regime’ la ‘crony capitalism’ – an ‘economic suicide – harakiri’. Though many elites are singing the glory of PVN, the aam adhmi – common people – could see through his design. They threw his government out and the congress party in to oblivion at the earliest opportunity in 1996. Again in 2004 also for the same reason people threw out BJP. Thus ‘Manmohonomics’ was thrown out twice by that electorate. Thank fully those were not 2016 (TN assembly elections). The elections were still basically and largely fair. But the damage had been done in the 5 years then and been continuing till date. If we have had a ‘right to recall’, this disaster could have been averted. A referendum too could have come in handy.
    AIADMK government raised the price of milk, electricity tariff and bus fair steeply all within a short period and not only continued for 4 years but got back to power, as people of Tamil Nadu have short memory. The average Indian voter remembered for 4 years and voted out PVN but not the voters of TN. Whether the election results announced is the verdict of the people or doctored/ pre programmed is a different issue. A right to recall and referendum could definitely have averted the disaster. 
    But ‘Right to recall’ and ‘Referendum’ are not as easy as adding another button as for NOTA.  Given the size of electorate/ population, these are basically not practicable in a direct form, though very much desirable.
    Let us consider this option:
    Conduct elections to Lok Sabha and Assemblies for 20% of the vacancies every year like that for Rajya Sabha (1/3rd replaced every 2 years). For this, for example for Lok Sabha, the 540 odd constituencies should be grouped in to 110 groups of 5 (some only 4) contiguous constituencies and election held for one constituency from each group every year. The mood (approval/ disapproval) of the people will be reflected in the 20% going for election every year. This will give a quick enough feedback to the elected rulers who betray the voters as also for those who actually serve the people.
    This amendment will serve the purpose of ‘Right to recall’ and ‘Referendum’ rolled in to one. The yearly election will virtually become a right to recall unruly governments (not individuals right away) as well as serve the purpose of referendum for the proposed policies of the parties. PVN and congress could have been packed off in 1992 and ADMK in 2012 itself. Babri Masjith demolition or Gujrath riots, the perpetrators could not have escaped the axe for long.  
    The EC will have more even load of work and expenses and they can have their own staff to man the whole exercise of elections including police force. They don’t have to depend on state government staff for anything – even for enumeration. Only the polling booths may have to be located at some state government premises.
    Some changes to the concepts of ‘code of conduct’ period ban on governments from declaring welfare policies/ measures etc. will have to be worked out though, as yearly elections will put a break on governance too often.

    This change will revolutionize the way we are governed. Along with introduction of a combination of first past post and proportional representation, the above phased out elections will almost be a Sakala Roga Nivarani – a Cure All – for most of, if not all the ills of the electoral system.