Thursday, August 23, 2018

அரசியலாரிடமிருந்து நம் உரிமையை காப்போம்:


தோழர்களே!

பாராளுமன்றம், சட்ட மன்றங்கள், உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் வெகு தொலைவில் எப்போதும் இருப்பதில்லை. நாம் பலகாலமாக ஏங்கிவரும் ‘தீய அரசியலிலிருந்து தூய அரசியலுக்கு பயணிக்க’ த் தேவையான வழித்தட வரைவு கீழே அளிக்கப்பட்டுள்ளது.

சமூக அரசியல் ஆர்வலர்களாகிய நாம் ஒவ்வொருவரும் தனித்தும், கூடியும் இந்தப் பயணத்தைத் துவக்கி தேர்தல்கள் வருமுன் தயார் நிலையில் இருப்பது மிக அவசியம்.

அரசியலாரிடமிருந்து நம் உரிமையை காப்போம்:
‘மக்கள் சுய ஆட்சி அதிகாரம்’ பெற – ‘கூடி, தேடி, தெரிந்தெடுத்து, நியமித்து, தேர்ந்தெடுக்கும் முறை’
செயல் வரைவு:

ஒவ்வொரு பகுதியிலும் உள்ள எல்லா சமூக அரசியல் ஆர்வலர்களும் கூடிப்பேசி செயல்படுத்த வேண்டிய விரிவான வழித்தட வரைவு இயற்ற வேண்டும்.

‘வேரூன்றிய கட்சித்தலைமை நியமிக்கும் வெட்பாளர்களால், அந்த கட்சிக்கும் அவர்கள் பின்நின்று ஆட்டுவிக்கும் பண மூட்டைகளுக்கும்தான் அவர்கள் செய்யும் ஊழலுக்கும், அராஜகத்திற்கும், ப்ரதிநிதிகளாக செயல்பட முடியும் என்பதனால் அவர்களை நிராகரித்து, மாற்றாக வாக்காளர்கள் தங்களுக்குள்ளேயே ‘தேடி, தெரிந்தெடுத்து’, தகுதியான வேட்பாளர்களை ‘நியமித்து, தேர்ந்தெடுத்தால்’ அவர்கள் மக்களின் உண்மையான ப்ரதிநிதிகளாக செயல்பட வைக்க முடியும். இதனால் நாம் பங்கேற்பு முறை ஜனநாயகத்திற்கு மற்றும் மக்கள் நல ஆட்சிக்கு மேம்பட முடியும்’, என்ற செய்தியை மூலை முடுக்குகளுக்கெல்லாம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும்:

சமூக வலைதளங்கள், மின்/ அச்சு ஊடங்கள் மூலம் இதைப் பற்றிய செய்திகளை பரப்புரை செய்ய வேண்டும். வீடியோ, பென் ட்ரைவ், லேப்டாப், ப்ரொஜெக்டர் மூலமும் பரப்புரை செய்ய வேண்டும்.

மிக முக்கியமாக பல லக்ஷம் கையேடுகள் அச்சடித்து – சுறுக்கமானதாக சராசரி வாக்காளர்களுக்கும், விரிவானதாக தொகுதிகளில் இந்தப் பணியாற்றக் கூடிய ஆர்வலர்களுக்கும் வழங்கவேண்டும். இதற்கான வரைவு, என்னிடமிருந்தும், உடன் பணிபுறிவோரிடமிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு தொகுதியிலும் வாக்காளர்களை சிறு குழுக்களாக – 200 லிருந்து 250 வரை, 60 – 75 வீடுகளில் வசிப்பவர்களை ‘மக்கள் மன்றம் - தளம் 1’, ஆக கூட்ட வேண்டும். நகரங்களில் இது ‘தெரு மன்றங்கள்’ ஆகவும், அடுக்கு மாடி குடியிருப்பு மன்றங்கள்’ ஆகவும், க்ராமப்புரங்களில் ‘பஞ்சாயத் வார்ட் மன்றம்’ ஆகவும் இருக்கும்.

இந்த மன்றங்களின் கூட்டங்கள் நடத்தி அவர்களுக்குள் ஒருவரை தேர்வு செய்து அடுத்த தளத்திற்கு தளம் 1 இன் ப்ரதிநிதியாக அனுப்ப வேண்டும். இந்த அடுத்த தளம் – 2, நகரங்களில் ‘ஏரியா மக்கள் மன்றம்’ ஆகவும், க்ராமங்களில் ‘க்ராம மக்கள் மன்றம்’ ஆகவும் இருக்கும். நல்ல பங்கேற்பை உறுதி செய்ய, 2 – 3 அமர்வுக்குப் பிறகு தேர்வுகள் செய்ய வேண்டும்.

இந்தப் ப்ரதிநிதித் தேர்வுக்கான அடிப்படை தகுதிகள்,
அவர் அந்த தெரு, குடியிருப்பு, வார்டில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.   
எந்த முன்னணி – வேரூன்றிய – அரசியல் கட்சி உருப்பினராக அல்லது ஆதரவாளராக இருத்தல் கூடாது.
அடிப்படையில் நேர்மையான, ஊழல்வாதியாக அல்லாதவராக இருத்தல் வேண்டும்.
சமுக, பொதுநலப் பணிகளில் ஈடுபாடு கொண்டவராக இருத்தல் வேண்டும்.
மொந்தைக் குடியனாக இருத்தல் கூடாது.

ஜாதி, மத, இன, மொழி, கல்வி, சொத்து போன்றவை தகுதியாக ஏற்கப்படக் கூடாது.

இந்த தளம் 2 ஏரியா மன்றங்கள், தளம் 1 இலிருந்து 10 ப்ரதிநிதிகள் போல் கொண்டதாக இருக்கும் – 2000 – 2500 வாக்காளர்களின் ப்ரதிநிதித்துவத்துடன்.

இதிலிருந்து முன்பு கூறிய முறையில் அடுத்த – ‘பெரிய ஏரியா மன்றங்கள் – தளம் 3’ – க்கு 10 ஏரியா மன்றங்களின் ப்ரதிநிதிகள் போல் தேர்வு செய்து அனுப்ப வேண்டும். தளம் 3 – 20000 – 25000 வாக்காளர்களின் ப்ரதிநிதித்துவத்துடன் செயல்படும்.  

சென்னை போன்ற பெரு நகரங்களில் தளம் 3, வார்ட் மன்றங்களாக இருக்கும். சிறு நகரங்களில் தளம் 3 இல் சில வார்ட்கள் கொண்டதாக இருக்கும். துணை மன்றங்களாக ஒவ்வொரு வார்டுக்கும் மன்றங்கள் அமையும். அவை உள்ளாட்சித் தேர்தலில் வார்ட்களுக்கு மக்கள் வேட்பாளர்கள் தேர்வுச் செய்யும்.

தளம் 3 இலிருந்து ப்ரதிநிதிகள் ‘சட்டமன்ற மக்கள் மன்றங்கள் – தளம் 4’ – க்கு தேர்வு செய்யப்படும். தமிழ் நாட்டில் இது 250,000 வாக்காளர்களின் ப்ரதிநிதித்துவம் கொண்டதாக இருக்கும். தளம் 3 இலிருந்து 10 ப்ரதிநிதிகள் தளம் 4 இல் அமர்வர். மற்ற மானிலங்களில் சட்ட மன்ற வாக்காளர்கள் எண்ணிக்கையை பொருத்து தளம் 3 மற்றும் தளம் 4 க்கு உறுப்பினர் எண்ணிக்கை மாற்றியமைக்கப்பட வேண்டும்.  உதாரணமாக: 150,000 உறுப்பினர் கொண்ட சட்டமன்றம் கொண்ட மாநிலத்தில் தளம் 4 இல் 8 உறுப்பினர்கள் தளம் 3 இலிருந்து – 19000 வாக்காளர்களின் ப்ரதிநிதியாக, மற்றும் தளம் 3 இல் 8 - 9 உறுப்பினர்கள் தளம் 2 இலிருந்து – 2375 – 2110 வாக்காளர்களுக்குப் ப்ரதிநிதியாக அமைவர்..

நாடாளுமன்ற மக்கள்மன்றம் - தளம் 5 – இல், தளம் 4 இலிருந்து தேர்வு செய்யபட்ட ப்ரதிநிதிகள் பங்கேற்பர். தமிழ் நாட்டில் இதில் 6 ப்ரதிநிதிகள் இருப்பர். இது 1,500,000 வாக்காளர்களுக்கான ப்ரதிநிதித்துவம் பெற்ற தளம். 

இந்த மன்றங்கள் மேலும் கீழுமாக தேடி, ஆய்ந்து, மக்களின் வேட்பாளர்களை, மூன்று தள ஆட்சிமன்றங்களுக்கும் நியமிக்கும். ஒருமனதாக தேர்வு செய்ய முயற்சி செய்ய வேண்டும். அப்படி முடியாத நிலையில், தேர்தல் முறையில் முடிவுகள் எடுக்கலாம்.

தேர்தல் சமயத்தில் நியமனம் நிராகறிக்கப்படுவதை, மற்றும் கடைசி நிமிஷத்தில் வேட்பாளர் விலகிக் கொள்வதை, ஈடு செய்ய, ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு பேர் தேர்வு செய்து, ஒரு வேளை முதலாமவரின் நியமனம் நிராகறிக்கப்பட்டால், அல்லது அவர் விலகினால், இரண்டாமவர் மக்கள் வேட்பாளராக அறிவிக்கப்பட வேண்டும்.

தேர்தலின் போது சாதாரணக் காகிதத்தில் ஒருவண்ண நோட்டீஸ் மூலம் மக்கள் வேட்பாளர் யார் என்பதை அறிவித்தால் போதும். பலவண்ணக் கையேடுகள், பகட்டான பரப்புரைகளெல்லாம் தேவைப்படாது. இவை தேர்தல் செலவை வெகுவாகக் குறைக்க உதவும். 

தேர்தலில் குளருபடி செய்து மக்கள் வேட்பாளர்கள் வெற்றிபெற முடியாமல் தடுக்கப்பட்டாலும், இந்த வேட்பாளர்கள் தான் மக்களின் முடிசூடா ப்ரதிநிதிகளாக ஏற்கப்படுவர். மக்கள் தங்கள் ப்ரச்னைகளை இவர்களிடம்தான் கொண்டு செல்வார்கள். இவர்கள் மக்களின் ப்ரச்னைகளைப் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் எடுத்துச் செல்ல அங்கீகறிக்கபடுவர். நாளடைவில் கட்சி நாமஉ, சமஉ வெல்லாம் மக்களிடம் மதிப்பிழந்து உதிர்ந்து போகும் நிலை ஏற்படும். மக்கள் வேட்பாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படும் நிலை உருவாகும்.

மக்கள் மன்றங்கள் முறையான பதிவு பெற்று நடை முறையில் ஏற்றுக் கொள்ளப் பட்டு, அடிக்கடி கூடி விவாதித்து பொதுப் பணிகளில் முடிவுகளெடுக்க முடியும். மக்கள் வேட்பாளர்கள் ஆட்சிமன்றங்களில் பெரும்பான்மை பெற்றதும் அரசியல் சாசனம், ஆர் பீ ஏ போன்றவற்றில் தேவையான சட்ட மாற்றங்களை கொண்டு வந்து மக்கள் மன்றங்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்க முடியும். 

இந்த மன்றங்கள் நம் ஆட்சிமன்ற ப்ரதிநிதிகளை தேர்வு செய்வது மற்றும் கண்காணிப்பதைத் தவிர தினப்படி ப்ரச்னைகளை – குப்பை அகற்றுதல், குடிநீர், வடிகால், சுத்தம் செய்தல், நீர்நிலைகள், நீர்வழிகளை தூர்வாரி பராமரிப்பது, சாலை, கல்விச்சாலைகள், மருத்துவ சாலைகள் பராமரிப்பு, என்று அனைத்திலும் மக்களின் தேவைக்கும் அரசு யந்த்ரத்திற்கும் இடையே பாலமாக செயல்படும்.

அதிகாரம் படைத்தவர்கள் தங்கள் பணியை செய்யத் தவரும் போது மக்கள் மன்றங்களே அவற்றை முன்வந்து செய்து, பின் அரசிடமிருந்து வரிவிலக்கு பெற்று நிலைமையை சரிசெய்து கொள்ளும். அரசின் கொள்கைகள், செயல்பாடுகளினால் ஏற்படும் தீமைகளை தவிர்க்க இந்த அமைப்பு பேருதவியாக இருக்கும்.

ஆக, மக்கள் வேட்பாளர்கள் ஆட்சி மன்றங்களில் சென்றமருமுன்னறே, ஆட்சி அதிகாரம் மக்கள் கையில் நேரடியாக வந்து சேரும்.

ஸ்டெர்லைட், 8 வழி சாலை, கூடங்குளம், நூட்ரினோ, வெள்ளம், புயல், வரட்சி, ஆழிப்பேரலை, எதுவாக இருப்பினும், அரசு தன் கடமையை செய்கிறதோ, இல்லையோ, இந்த மக்கள் மன்றங்கள் முன்நின்று மக்கள் உரிமையை பாதுகாப்பதும், மீட்பு, மீளமைப்பு என்று எல்லா வகையிலும் மக்கள் நலனுக்காகப் பாடுபடும்.

இதுதான் மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் உண்மையான ஜனநாயகமாகப் பரிமளிக்கும். இதை செய்ய அரசியல் சாசனத்திலோ, ஆர் பீ ஏ விலொ வேறு எந்தச் சட்டத்திலும் எந்தவித மாறுதலும் தேவை இல்லை.

இதன் மூலம் ப்ரதிநிதித்துவ ஜனநாயகத்திலிருந்து, உன்னதமான பங்கேற்புமுறை ஜனநாயகத்திற்கு மேம்படுவோம்.

திரும்பி அழைக்கும் உரிமையும், சட்ட திட்டங்களுக்கு மக்களின் ஆதரவை, அங்கீகாரத்தை கணிக்கும் வசதியும் இதன் மூலம் உபரியாகக் கிடைக்கும். ஜனநாயகத்தின் உண்மையான பலனை அனுபவிக்க முடியும்.

உலகமே நம்மைப் பார்த்து பொறாமைப்படும், நம்மை பின்பற்ற எத்தனிக்கும்.

சில செய்ய வேண்டியன, செய்யக்கூடாதன:
நம்மை நாமே முன்னிருத்தக்கூடாது.
நம்மையும், நம் சொந்தத் தேர்வையும் மக்கள் ப்ரதிநிதியாக ஒருபோதும் திணிக்க முற்படக்கூடாது. மக்கள் நம் தேர்வை ஒரு போதும் ஏற்கப்போவதில்லை.
அவர்களே தேர்வு செய்யட்டும். அப்போதுதான் அவர்கள் அந்த வேட்பாளர்களை சொந்தம் கொண்டாடி வெற்றிபெறச் செய்வர்.
நாம் பின்னிருந்து மக்களுக்கு உதவ, ஊக்குவிக்க மட்டும் வேண்டும்.
ஆர்வலர்களுக்குள்ளும் மன்றனங்களிலும் பூசல்களை தவிர்க்கவேண்டும். எப்போதும் ஒருமனதாக தேர்வு செய்வதும், முடிவெடுப்பதும் தான் நன்மை பயக்கும்.
மொழி, இன, ஜாதி, மத, வர்க அடையாளங்களை தவிர்க்கவும். ப்ரதிநிதிகள் மக்களின் பொதுவான நன்மையையே முன்னிருத்திப் பணியாற்ற வேண்டும்.
தம்மைத் தாமே நியமித்துக் கொள்வதையும், சிபாரிசு செய்வதையும் ஊக்குவிக்கக் கூடாது.
நாம் - ஆர்வலர்கள் – கூட்டங்களை கூட்டுவது, நடவடிக்கைகளை கண்காணிப்பது, வழிகாட்டுவது தவிர நேரடியாக ப்ரதிநிதிகளை தேர்வு செய்வதில் ஈடுபடக்கூடாது.

பயணத்தைத் துவங்குவோமா தோழர்களே?

K. Raja Rajan   

(A technologist by qualification, farmer by option and a Gandhian by conviction)
President – Gandhian Initiative for Social Transformation - Chennai
Ph: 94441 60839,  Email: letsbelldcat@gmail.com
Face book: Raja Rajan K,   Blog: prithvi-mithra.blogspot.in

No comments:

Post a Comment